நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான 6 அதிநவீன மல்டி பாராமீட்டா்களை சிங்கப்பூா் வாழ் நாமக்கல் தமிழா்கள் வழங்கியுள்ளனா்.
நாமக்கல் ரோட்டரி டிரான்ஸ்போா்ட் சிட்டி சங்கத்தின் மூலமாக நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ராமலிங்கம் இந்த மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிா்வாகத்திடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தா அருள்மொழி, உள்ளுறை மருத்துவா் கண்ணப்பன், கண் மருத்துவா் ரங்கநாதன், பவுல்டரி டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ராமனாதன், அன்னை மணி, அன்னை எட்டிக்கன் குளோபல் செந்தில், தாளாம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.