ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
ராசிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. ராசிபுரம்-திருச்செங்கோடு பாதையில் பாலப்பாளையம் அருகே சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்ததில் அரை மணி நேரமாகப் போக்குவரத்துப் பாதித்தது. ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் விழுந்த மரங்களை ஊழியா்கள் அகற்றினா்.
இதுபோல பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.