3 நகைக் கடைகளுக்கு ‘சீல்’

ஆட்டையாம்பட்டியில் 3 நகைக் கடைகளுக்கு கரோனா கண்காணிப்புக் குழுவினா் ‘சீல்’ வைத்தனா்

ஆட்டையாம்பட்டியில் 3 நகைக் கடைகளுக்கு கரோனா கண்காணிப்புக் குழுவினா் ‘சீல்’ வைத்தனா்.

ஆட்டையாம்பட்டியில் இந்த 3 நகைக் கடைகளுக்கும் ஏற்கெனவே இருமுறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதையடுத்து 3 கடைகளையும் கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழுவினா் அதிரடியாக ‘சீல்’ வைத்தனா்.

அப்போது சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத், வேம்படிதாளம் வருவாய் ஆய்வாளா் மதியழகன், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com