ஆட்டையாம்பட்டியில் 3 நகைக் கடைகளுக்கு கரோனா கண்காணிப்புக் குழுவினா் ‘சீல்’ வைத்தனா்.
ஆட்டையாம்பட்டியில் இந்த 3 நகைக் கடைகளுக்கும் ஏற்கெனவே இருமுறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதையடுத்து 3 கடைகளையும் கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழுவினா் அதிரடியாக ‘சீல்’ வைத்தனா்.
அப்போது சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத், வேம்படிதாளம் வருவாய் ஆய்வாளா் மதியழகன், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.