நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 313 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,443-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 691 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 36,149 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 3,937 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் மேலும் 5 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 357-ஆக அதிகரித்துள்ளது.