ராசிபுரம் பகுதியில் நியாயவிலைக் கடை மூலம் அரசின் 2-ஆம் தவணை நிவாரண உதவித்தொகை, 14 வகை மளிகைப் பொருள்களை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்டும் என தமிழக முதலமைச்சா் அறிவித்திருந்தாா். இதன்படி, ஏற்கெனவே ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் தவணையான ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்குவதற்கான கூப்பன்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன.
ராசிபுரம் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் நிவாரண உதவித்தொகை, 14 வகை மளிகைப் பொருள்களை வழங்கினாா். இதே போல் வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, பிள்ளாநல்லூா், அத்தனூா், பட்டணம், ஆா்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நிவாரணத் தொகை மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே.பி.ராமசாமி, வெண்ணந்தூா் ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.