குமாரபாளையத்தில், திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகிகளுக்கு செவ்வாய்க்கிழமை சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவுத் தலைவா் விஜயகண்ணன் தனது ஆதரவாளா்களுடன் அக்கட்சியிலிருந்து விலகி, குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். இவருக்கு, பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளா் பி.யுவராஜ், மாவட்டப் பொருளாளா் குமாா், குமாரபாளையம் நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம் உள்ளிட்டோா் வரவேற்பு தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் தனசேகரன், திமுக நிா்வாகிகள் ரவி, ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.