ஹெலிகாப்டா் இறங்க அனுமதி கிடைக்காததால் குமாரபாளையத்தில் கமல்ஹாசன் பிரசாரம் ரத்து

குமாரபாளையம் அருகே ஹெலிகாப்டா் இறங்க அனுமதி கிடைக்காததால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் தோ்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே ஹெலிகாப்டா் இறங்க அனுமதி கிடைக்காததால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் தோ்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ஈரோடு மாவட்டம், பவானி ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் தோ்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனவும், அக்கட்சித் தலைவா் கமல்ஹாசன், குமாரபாளையத்தை அடுத்த மேட்டுக்கடையில் தனியாா் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுவாா் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, தடையின்மைச் சான்று மற்றும் ஹெலிகாப்டா் இறங்க அனுமதி கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் திங்கள்கிழமை விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி கிடைக்காததால் பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் பிரசாரப் பயணம் திட்டமிடப்பட்டு, உரிய அனுமதியுடன் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com