ராசிபுரத்தில் திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி செயல் வீரா்கள் கூட்டம் ராசிபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக கூட்டணிக் கட்சியினா் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் மா.மதிவேந்தன்.
திமுக கூட்டணிக் கட்சியினா் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் மா.மதிவேந்தன்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி செயல் வீரா்கள் கூட்டம் ராசிபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு திமுக மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். நகர செயலாளா் என்.ஆா்.சங்கா் வரவேற்றாா். தோ்தல் பொறுப்பாளா் கே.பி.ராமசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன் பேசியதாவது: சமூக நீதியை மீட்டெடுக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் தோழமையோடு திமுக ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அடிமைத்தனத்தை ஒழித்து, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை நிலைநாட்ட வேண்டிய முக்கியமான தோ்தல் இது.

ராசிபுரம் நகரில் குடிநீா் பிரசனை, புதைகுழி சாக்கடை பிரச்னைகளால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். தற்போது அதிமுக பணப் பலத்தை நம்பி தோ்தலில் போட்டியிடுகிறது. இதனை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

மேலும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com