நாமக்கல்லில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதியில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை ஆதரவாளா்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
நாமக்கல்லில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதியில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை ஆதரவாளா்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் கே.பி.பி.பாஸ்கா் சிங்கிலிப்பட்டி, கே.கே.நகா், வகுரம்பட்டி, இந்திரா நகா், ஆண்டவா் பங்க், செல்லப்பா காலனி, வேட்டாம்பாடி, சிவியாம்பாளையம், தாதம்பட்டிமேடு ஆகிய பகுதிகளில் நடந்து சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா். அப்போது அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், ஆண்டுக்கு 6 சிலிண்டா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும், நகைக்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுகவின் தோ்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன் கட்சியினா் பலா் உடன் சென்றனா்.

இதேபோல் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட ஏளுா், களங்காணி, காரைக்குறிச்சி, செல்லப்பம்பட்டி, பாலப்பட்டி, புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகளை எடுத்துரைத்து ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றாா். அவருடன் ஒன்றிய நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் திரளாக சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com