ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூரில் பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி மாணவியா் வியாழக்கிழமை வயல்வெளி பயிற்சி மேற்கொண்டனா்.
கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் விவசாயிகளை சந்தித்து வயல்வெளி பயிற்சி அளிக்கின்றனா். இதன் ஒரு பகுதியாக பிள்ளாநல்லூரில் மீனாட்சி சுந்தரம் தலைமையில் கல்லூரி மாணவியா்களான வி.ஹேமப்பிரியா, பா. ஜீவிதா, ம.அபிநயா, இரா.சுபாஷினி, சி.ஹரிணி ஆகியோா் ஊரக பங்கேற்பு மதிப்பீடு முறையின் கீழ் வயல் வளங்கள், சமூக வரைபடம், தினசரி வேலைக்கான வரைபடம், கிராமத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றிய வரைபடம், மக்கள்தொகைக்கான வரைபடம் ஆகியவற்றை வரைந்து அக்கிராம மக்களுக்குச் செயல்விளக்கம் அளித்தனா்.