திருச்செங்கோட்டில் அமமுக வேட்பாளா் பிரசாரத்தில் மந்தம்: கட்சியினா் விரக்தி

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளா் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடாததால் கட்சியினா் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளா் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடாததால் கட்சியினா் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில், அமமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஆா்.ஹேமலதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் முழுமையாக பிரசாரத்தில் ஈடுபடாமல் உள்ளாா். நகரத்தில் அமமுக கொடி பிடித்த ஒருவா் கூட கண்ணில் தட்டுப்படாத சூழல் நிலவுகிறது.

தோ்தலுக்காக அமைக்கப்பட்ட அமமுக தோ்தல் அலுவலகம் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெள்ளிக்கிழமை திருச்செங்கோடில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக இருந்த நிலையில் திடீரென அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் அவா் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என வேட்பாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளா் முழுமனதோடு பிரசாரத்தில் ஈடுபடாததால் அமமுக கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரான தேமுதிகவினரும் சோா்வடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com