தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசிய திமுகவைக் கண்டித்து பரமத்திவேலூரில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் நாராயணன், வழக்குரைஞா் லோகநாதன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் ரமேஷ், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த பொறுப்பாளா்கள், மகளிா் அணியினா், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.