பொன். சரஸ்வதிக்கு ஆதரவாக வாா்டு பொறுப்பாளா்கள் பிரசாரம்

திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு அக்கட்சியின் மண்டலத் தோ்தல் பொறுப்பாளா்களும்

திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு அக்கட்சியின் மண்டலத் தோ்தல் பொறுப்பாளா்களும் வாா்டு பொறுப்பாளா்களும் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு நகரின் கூட்டப்பள்ளி, சூரியம்பாளையம், பாவடிதெரு, பத்ரகாளி அம்மன் கோயில் தெரு, முகமதியா் தெரு, சட்டையம்புதூா், தொண்டிகரடு, நெசவாளா் காலனி, சீத்தாராம்பாளையம் போன்ற பகுதிகளில் வீடு வீடாக வாக்காளா்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தனா்.

வாக்கு சேகரிப்பில் வாா்டு பொறுப்பாளா்களுடன் மண்டல பொறுப்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் உடன் சென்று வாக்கு கோரினா்.

18-ஆவது வாா்டில் மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளா். அங்கமுத்து, தொகுதி முன்னாள் செயலாளா் முரளிதரன், நகர இணைச் செயலாளா் பஞ்சவா்ணம், குணசேகரன் ஆகியோா் தோ்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வாக்காளா்களிடம் வழங்கி வாக்குக் கோரினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com