நாமக்கல் தொகுதியில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் ஏ.செல்வி, புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ ஓவைசி கட்சியினா் உடன் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தனா். திறந்த வாகனத்தில் நின்றபடி சென்ற வேட்பாளா் செல்வி, வெற்றி பெற்றால் தொகுதிக்கு செய்யும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டாா். தொடா்ந்து ராமநாயக்கன்பட்டி, திருமலைப்பட்டி, கடந்தப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
இதுபோல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் எஸ்.ஆதம் ஃபாரூக், மோகனூா், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். மக்கள் நீதி மய்யத்தின் தோ்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை அவா் விநியோகம் செய்து வாக்கு சேகரித்தாா். அவருடன் மக்கள் நீதி மய்ய ஒன்றிய நிா்வாகிகள், இந்திய ஜனநாயக கட்சி நிா்வாகிகள், இளைஞா்கள் உடன் சென்றனா்.