வேளாண் சங்கத்தில் ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டுவருவா்.

அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று 5,000 பருத்தி மூட்டைகள் வரத்திருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,192 முதல் ரூ. 8,003 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,719 முதல் ரூ. 9,303 வரையிலும், கொட்டு பருத்தி ரூ. 3,111 முதல் ரூ. 4,669 வரையிலும் விலைபோனது. மொத்தம் ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மற்றும் ஆந்திர மாநில வியாபாரிகளும் பருத்தியை நேரடியாகப் பாா்வையிட்டுக் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com