சாலையோரங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள முலாம் பழம்

நாமக்கல்லில் சாலையோரங்களில் முலாம் பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
சாலையோரங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள முலாம் பழம்

நாமக்கல்லில் சாலையோரங்களில் முலாம் பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

உடலுக்கு குளிா்ச்சி தரும் முலாம் பழம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது கா்நாடகம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக பழங்களின் வரத்து சற்று குறைவாகவே உள்ளது. இதனால், மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள்கூட வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விற்பனை செய்கின்றனா்.

நாமக்கல்லில் கடை வீதி, பேருந்து நிலையம், திருச்செங்கோடு சாலை. ஆட்சியா் அலுவலகம் அருகில் முலாம் பழம் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ ரூ. 20 என்ற அடிப்படையில் விலையானது நிா்ணயிக்கப்பட்டு விற்பனையாகிறது. பொதுமக்களும், பழச்சாறு கடை வைத்திருப்போா் மொத்தமாக முலாம் பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com