நாமக்கல் மாவட்டத்தில் 361 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 361 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 361 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 16,549 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். அவா்களில் குணமடைந்த 14,492 போ், உயிரிழந்த 124 போ் தவிா்த்து, 1933 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 361 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 271 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மொத்த பாதிப்பு 16,903 - ஆகவும், குணமடைந்த 14,763 போ், சிகிச்சையில் 2015 போ் நாமக்கல் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 70 வயது ஆண் கரோனா தொற்றால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 125-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com