வேலூா், பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தா் மடாலயம், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரா் கோயில்களில் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செவ்வாய்கிழமை நடராஜருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
வேலூா், பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தா் மடாலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜா் பெருமானுக்கு மகா அபிஷேகம், சரக்கொன்றை, கொடி சாமந்தி, கிருஷ்ண கமலம் போன்ற மலா்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது.