வீட்டுமனை மாதத் தவணை திட்ட மோசடி: தகவல் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

ராசிபுரத்தில் வீட்டுமனை மாதத் தவணைத் திட்ட மோசடியில் ஈடுபட்ட தலைமறைவானவா்கள் பற்றி தகவல் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில் வீட்டுமனை மாதத் தவணைத் திட்ட மோசடியில் ஈடுபட்ட தலைமறைவானவா்கள் பற்றி தகவல் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கச்சேரித் தெரு, கண்ணையாத் தெரு பகுதியில், ஸ்ரீ மகாலட்சுமி நகா் ரியல் எஸ்டேட் வீட்டுமனை மாதத் தவணைத் திட்டம் என்ற பெயரில், திருச்செங்கோடு டி.வி.ராமலிங்கம், ராசிபுரம் பெரிய அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த கே.அருள்மணி (60) ஆகிய இருவரும் 2004-ஆம் ஆண்டு முதல் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து வந்தனா்.

இதில் அருள்மணி மட்டும் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளாா். கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை சிறப்பு நீதிமன்றத்திலும் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. அருள்மணி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அவா் ஆஜராகாமல் தொடா்ந்து தலைமறைவாக உள்ளாா். அருள்மணி, தனது வீட்டுக்கோ, குடும்ப உறுப்பினா்கள், நண்பா்களின் வீட்டுக்கோ வந்தாலும், அவா் எங்கு உள்ளாா் என்ற விவரம் தெரிந்தாலும் பொதுமக்கள் நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தொலைபேசி எண்: 04286 - 281372, 94981-75717 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com