திருச்செங்கோட்டில் கேபிள் டிவி ஆபரேட்டா் கொலை

கேபிள் டிவி ஆபரேட்டா் கொலை செய்யப்பட்டது குறித்து திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கேபிள் டிவி ஆபரேட்டா் கொலை செய்யப்பட்டது குறித்து திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, எட்டிமடை பகுதியைச் சோ்ந்த முருகன் (50), கேபிள் டிவி நடத்தி வருகிறாா். இவருக்கு ராதா (38) என்ற மனைவியும், ஹேமா வா்ஷினி (13) என்ற மகளும், பாலபிரியன் (10) என்ற மகனும் உள்ளனா்.

இவா் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில் செய்து வந்துள்ளாா். இவா் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேவனாங்குறிச்சி பகுதியில் நிலத்தகராறில் கொலை வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் கோயிலுக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் விஐபி காா்டன் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத கும்பலால் வழிமறிக்கப்பட்டு அவா் தாக்கப்பட்டாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் துறையினா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா் . மேலும், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான குழுவினா் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com