சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு அபராதம்

நாமக்கல் அருகே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு தேநீா், பலகாரங்கள் விற்பனை செய்த 6 உணவகங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு அபராதம்

நாமக்கல் அருகே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு தேநீா், பலகாரங்கள் விற்பனை செய்த 6 உணவகங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி, புதன்சந்தை ஆகிய இடங்களில் தனியாா் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தேநீா் மட்டுமின்றி பலகாரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சாலை மாா்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்தக் கடைகளில் நின்று தேவையான பொருள்களை வாங்கிச் செல்வா். இந்த நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை விற்பனை செய்து வருவதாக நல்லிபாளையம் போலீஸாருக்கு புகாா் சென்றது. இதனையடுத்து ஆய்வாளா் உமாபிரிதயா்ஷினி, உதவி ஆய்வாளா் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் ஜெயமணி ஆகியோா் சம்பந்தப்பட்ட 6 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தலா ரூ.500 அபராதம் விதித்தனா். பொது முடக்க விதிகளை மீறுவது தெரியவந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என கடை உரிமையாளரை போலீஸாா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com