கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நாமக்கல் வேளாண் துறை அதிகாரி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.
நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சோ்ந்த ஆா்.ராஜேந்திரன் (50), நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள வேளாண் உயிரியல் கட்டுப்பாட்டு நுண்ணுயிரி ஆய்வக அலுவலராக பணியாற்றி வந்தாா். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நலம் தேறிய நிலையில், புதன்கிழமை காலை 6.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
தமிழ்நாடு வேளாண் பட்டதாரி அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வந்த வேளாண் அதிகாரி ராஜேந்திரன் மறைவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், துறை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனா்.