பரமத்திவேலூா் வட்டாரத்தில் முழு பொதுமுடக்கத்தை மீறி சுற்றிய 47 இருசக்கர வாகனங்களும், 3 சரக்கு ஆட்டோக்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா ரணவீரன் அறிவுரையின்படி பரமத்திவேலூா், பரமத்தி, ஜேடா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனத்தில் வந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினா். இதையடுத்து 47 இருசக்கர வாகனங்கள், 3 சரக்கு ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.