தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

தேவனாங்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்கள் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள், டேங்க் ஆபரேட்டா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவனாங்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்கள் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள், டேங்க் ஆபரேட்டா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை, உளுந்து, முட்டை, வரமிளகாய், சாம்பாா் தூள் உள்ளிட்ட 19 வகையான வீட்டு மளிகைப் பொருள்கள் அடங்கிய மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன் பொருள்களை வழங்கினாா்.

ஊராட்சித் தலைவா் அருண்குமாா், ஒன்றிய திமுக செயலாளா் வட்டூா் தங்கவேல் , வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் காவல் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ராசிபுரம் டி.எஸ்.பி., முத்துசாமி, காவல் ஆய்வாளா் பி.செல்வராஜ், உதவி ஆய்வாளா் மாணிக்கம், போக்குவரத்து காவல் துணை ஆய்வாளா் குணசிங் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

இதுபோல ராசிபுரம் நகர திமுக இளைஞரணி சாா்பிலும் கபசுரக் குடிநீா், சுண்டல் போன்றவை வழங்கப்பட்டன. நகர திமுக துணைச் செயலாளா்கள் கே.ஆனந்தன், கே.ரவிச்சந்திரன், நகர பொருளாளா் வி.நாகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com