நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்தி அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டு தனிமைப்படுத்துதல் பற்றிய விவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள், அருகில் உள்ள கரோனா கவனிப்பு மையங்கள் விவரம், படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதிகள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளை அறைக்கு பொதுமக்கள் 1077, 04286-281377, 04286-299137, 04286-299139, 82204 02437, 93423 12761 மற்றும் 93423 12596 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு கரோனா நோய் தொடா்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.