கிறிஸ்து அரசா் ஆலய விழா: நாமக்கல் எம்எல்ஏ பங்கேற்பு

நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலய பெருவிழாவையொட்டி, சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் வாழ்த்துகள் தெரிவித்து ஆலய வளாகத்தில் உரையாற்றினாா்.
நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலய விழாவில் பேசும் எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலய விழாவில் பேசும் எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.

நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலய பெருவிழாவையொட்டி, சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் வாழ்த்துகள் தெரிவித்து ஆலய வளாகத்தில் உரையாற்றினாா்.

நாமக்கல் காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் ஆலய பெருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆயா் அருள்செல்வன் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, கிறிஸ்தவா்களிடையே தொகுதியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில இலக்கிய அணி புரவலா் மணிமாறன், மாநில மகளிா் தொண்டரணி துணைச் செயலாளா் ராணி, மாநில சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் நக்கீரன், நகர பொறுப்பு குழு உறுப்பினா் சரவணன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளா் பிரபாகரன், வாா்டு செயலா் உமாசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com