பரமத்தி அருகே குடும்பத் தகராறு காரணமாக முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்தை சோ்ந்தவா் பழனி (60). தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்து இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை பழனி விஷமருந்தி உயிருக்கு போராடியுள்ளாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் அவரைக் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.