காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சநேய சுவாமிக்கு பாலாபிஷேகம்

காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.

காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இக்கோயிலில் சுவாமி 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் சுவாமி காட்சியளிக்கிறாா். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி, தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.

அதன்படி, காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், சந்தனம், மஞ்சள் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. காா்த்திகை மாதம் என்பதால் ஏராமான ஐயப்ப பக்தா்கள், வெளி மாவட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com