நாமக்கல் வேளாண் விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 850 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,760 முதல் ரூ. 9,000 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,670 முதல் ரூ. 10,069 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,699 முதல் ரூ. 5,640 வரையிலும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி மூட்டைகளை தரம் பாா்த்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.