நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த ஒருவா் உயிரிழந்தாா்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகா் கட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் புனிதகுமாா் (41). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த புனிதகுமாரை அப்பகுதியில் இருந்தவா்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.