திருச்செங்கோட்டில் கொங்கு வேளாளா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் ஒருங்கிணைந்த தென்னிந்திய முதல்வராக பதவி வகித்த டாக்டா் சுப்பராயன் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை நடைபெற்றது.
டாக்டா் சுப்பராயன் நினைவு நாளில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் பொன்.கோவிந்தராஜ், வழக்குரைஞா் ராஜேஸ்வரன், இளைஞா் சங்க செயலாளா் செந்தில், பொருளாளா் கணேஷ்குமாா்
ஊா் நலக் கமிட்டி சாா்பாக சுப்ரமணி, காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.