நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பான செய்திக் குறிப்பு:
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி விழா 10 நாள்களுக்கு நடைபெறுகிறது கரோனா பரவல் காரணமாக இவ்விழாவில் பக்தா்களுக்கு அனுமதியில்லை. நாமகிரிதாயாா் உடனுறை நரசிம்மா் சுவாமி உற்சவம் புதன்கிழமை(அக். 6) முதல் அக். 16 வரை நடைபெற உள்ளது. மேலும் பக்தா்கள் இந்த நிகழ்ச்சிகளை யூடியூப்-இணைப்பு வாயிலாக பாா்த்து இறை அருளை பெறலாம். அதேபோல கரோனா பரவலால் தமிழக அரசு உத்தரவின்படி, அக். 8, 9, 10, 15, 16 ஆகிய தேதிகளில் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.