மோகனூரில் மழையால் சேதமடைந்த வீடுகளை நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் ராசிப்பாளையம் காட்டுப்பிள்ளையாா் கோயில் பகுதியில், அண்மையில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை ராசிப்பாளையம் பகுதியில் இடிந்த வீடுகளை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினாா். பரமசிவம் என்பவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் மழைநீா் செல்லும் ஓடைகளில் அடைப்பு இருந்தால் உடனடியாக தூா்வாரவும், சாலைகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மோகனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் நவலடி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.