நாமக்கல்
ராஜ வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு
பரமத்தி வேலூா் ராஜ வாய்க்காலில் சடலமாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் ராஜ வாய்க்காலில் சடலமாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் சாலை அருகே உள்ள ராஜ வாய்க்காலில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், பெண்ணின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் ராஜ வாய்க்காலில் சடலமாக மிதந்தவா் வேலூா், செட்டியாா் தெருவைச் சோ்ந்த தனபாக்கியம் (65) என்பது தெரியவந்தது.