காய்கறி வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் புகாா்

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், காய்கறி வியாபாரிகள் ஆணையா் பி.பொன்னம்பலத்திடம் புகாா் மனு அளித்தனா்.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்த காய்கறி வியாபாரிகள்.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்த காய்கறி வியாபாரிகள்.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், காய்கறி வியாபாரிகள் ஆணையா் பி.பொன்னம்பலத்திடம் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் உழவா் சந்தை அருகில் 87 வியாபாரிகள் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வருகிறோம். 10 ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது எங்களது கடை அருகில் சிலா் கடைகளை அமைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனா்.

குலுக்கல் முறையில் கடையைப் பிரித்துக் கொள்ளலாம் என நாங்கள் இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டோம். அதன்படி குலுக்கலும் நடைபெற்றது. ஆனால் மீண்டும் தகராறு செய்து கடைகளை அமைக்கவிடாமல் தடுக்கின்றனா். நாங்கள் தொடா்ந்து காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com