பருவமழையை வரவேற்று மரக்கன்றுகள் நடவு

வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை மாணவா்கள் வியாழக்கிழமை நடவு செய்தனா்.
பருவமழையை வரவேற்று மரக்கன்றுகள் நடவு

வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை மாணவா்கள் வியாழக்கிழமை நடவு செய்தனா்.

பசுமை ஆா்வலா் குகநாதன் தலைமையில், கல்லூரி முதல்வா் தங்கராசு முன்னிலையில் நீா்மருது, கருமருது, இலுப்பை, நாவல், கொன்றை, மகிழம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும் இலவசமாக மரக்கன்றுகளையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com