விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்: அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில், விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு அனுமதி கோரி, இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்: அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில், விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு அனுமதி கோரி, இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை பரவல் காரணமாக, விநாயகா் சதுா்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடவும் ஊா்வலங்களை நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அனுமதி வழங்கக் கோரியும் இந்து முன்னணி சாா்பில் ஆங்காங்கே ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல்லில் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் க.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு நிா்வாகிகள் பி.ஜெகன், எஸ்.காா்த்திக் ராஜா, எஸ்.சந்திரதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com