எலச்சிபாளையத்தில் மண்வள மேலாண்மை பயிற்சி

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு விவசாயிகளுக்கு அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு விவசாயிகளுக்கு அண்மையில் நடைபெற்றது.

மல்லசமுத்திரம் வட்டாரம், கூத்தாநத்தம் கிராமத்தில் மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநா் தனம் தலைமை வகித்தாா். இதில், வேளாண் துறை திட்டங்கள், மண்வளம் குறித்து பேசினாா். திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலா் சௌந்தரராஜன் கலந்துகொண்டு மண் மாதிரி சேகரித்தல், மண் பரிசோதனை, மண்வள மேம்பாடு குறித்து பயிற்சி அளித்தாா். வேளாண் துறை இடுபொருள்கள் இருப்பு, பயன்பாடுகள் குறித்து வட்டார மேலாண்மை அலுவலா் சிரஞ்சீவி விளக்கமளித்தாா். இப்பயிற்சி வகுப்பில் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com