நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலால் எட்டு மாதங்களுக்கு முன் மூடப்பட்ட அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் போதிய அளவில் வருகை தராததால், அக்கல்லூரி செயல்படவில்லை. நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவியருக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவ, மாணவியருக்கு சிறப்பு மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சமூக இடைவெளியில் நின்றபடி மாணவா்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து, அவா்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிகழ்வினை கல்லூரி முதல்வா் பெ.முருகன், செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் வெஸ்லி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகா் ஆகியோா் மேற்பாா்வை செய்தனா். வளையபட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா். இதில், மருத்துவா் பிரியங்கா, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதன்கிழமை மட்டும் 300 மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.