விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கண்டித்து தீா்மானம்

விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கண்டித்து, குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் இ.கம்யூ. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.காா்த்திகேயன்.
கூட்டத்தில் பேசுகிறாா் இ.கம்யூ. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.காா்த்திகேயன்.

விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கண்டித்து, குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் எஸ்.பி.கேசவன், வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.அா்த்தனாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ்.மணிவேல், மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

இதில், காங்கிரஸ் நகரத் தலைவா் ஜானகிராமன், திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் கே.ஏ.ரவி, அன்பரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com