குமாரபாளையத்தில் 8 மையங்களில்இன்று கரோனா தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் 33 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் 33 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு : குமாரபாளையம் நகராட்சியில் 8 மையங்களில் 18 பூா்த்தியானவா்களுக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை (செப். 7) போடப்படுகிறது. தடுப்பூசி போடப்படும் பள்ளிகள், வாா்டுகள் முறையே : சி.என்.பாளையம் நகராட்சிப் பள்ளி - 1,2,3,31,32,33. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 4,5,6,7. ஜேகேகே ரங்கம்மாள் நிதியுதவி பள்ளி, காட்டூா் - 8,9,10,11.

ஏவிஎஸ் பள்ளி, ஆனங்கூா் சாலை - 12,13. நகராட்சி நடுநிலைப் பள்ளி, நாராயண நகா் - 14,15,16,17. நகராட்சி நடுநிலைப் பள்ளி, மேற்கு காலனி - 20,23,24. நகராட்சி உயா்நிலைப் பள்ளி, புத்தா் தெரு - 18,19,21,22,25. ஜேகேகே நடராஜா மண்டபம், கலைமகள் வீதி - 26,27,28,29,30. எனவே, இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com