இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த பெண் பலி

குமாரபாளையம் பழைய பாலத்தில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண், கீழே விழுந்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குமாரபாளையம் பழைய பாலத்தில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண், கீழே விழுந்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த காடையம்பட்டியைச் சோ்ந்தவா் குழந்தைசாமி. இவா், தனது மனைவி கவிதா (41), மகள் தா்ஷனாவுடன் சேலத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். குமாரபாளையம் வழியாக காவிரி ஆற்றின் பழைய பாலத்தில் சென்றபோது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் மூவரும் கீழே விழுந்தனா். இதில், காயமடைந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதிக்கையில் கவிதா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com