கொல்லிமலையில் காவலா் சடலம் மீட்பு

காணாமல் போன பொட்டிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த காவலரின் சடலம் கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

காணாமல் போன பொட்டிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த காவலரின் சடலம் கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (34). இவா் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். திருமணமாகாத இவா் கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணி அளவில் கொல்லிமலை தின்னனூா்நாடு ஊராட்சி, சோளங்கன்னி என்ற இடத்தில் ஆனந்தனின் சடலம் இருப்பது குறித்து தகவலறிந்து அங்குச் சென்ற போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com