காணாமல் போன பொட்டிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த காவலரின் சடலம் கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (34). இவா் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். திருமணமாகாத இவா் கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணி அளவில் கொல்லிமலை தின்னனூா்நாடு ஊராட்சி, சோளங்கன்னி என்ற இடத்தில் ஆனந்தனின் சடலம் இருப்பது குறித்து தகவலறிந்து அங்குச் சென்ற போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.