மழையால் ஈக்கள் பெருக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

பருவ மழையால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவ மழையால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2, 70.7 டிகிரியாக நிலவியது. அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலை:

வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு 8 கி. மீ. என்றளவிலும் வீசும்.

சிறப்பு ஆலோசனை: அண்மைக் காலமாக மழை விட்டுவிட்டு பெய்து வருவது ஈக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்ப வெப்பநிலையாக உள்ளது. இதனால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகியுள்ளது. பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளைக் கையாளுவது மிகவும் சிறந்ததாகும். ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் காா்டை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com