நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. 25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். செப். 7-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 1,100 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
அதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 7,242 முதல் ரூ.8,200 வரையிலும், சுரபி ரகம் ரூ.7,313 முதல் ரூ.9,956 வரையிலும், மட்ட ரகம் ரூ.3,391 முதல் ரூ.5,100 வரையிலும் விற்கப்பட்டன. மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தனா்.