கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாா் 150-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
அக் கட்சியின் மகாலட்சுமி நகரில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனா் நல்வினை செல்வன், மாநில கொள்கை பரப்பு செயலாளா் வேங்கை சிவக்குமாா், ராசிபுரம் நகர பொறுப்பாளா் க.சங்கமேஸ்வரன், சமூக ஆா்வலா் காந்தி சங்கா் ஆகியோா் மரக் கன்றுகளை நட்டுவைத்தனா். முன்னதாக வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.