ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடத் தோ்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து கட்சியினா் ராசிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.
திமுக., சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா். என்.ராஜேஷ்குமாா் பெயரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, ராசிபுரம் நகரில் கட்சியினா் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதேபோல், ராசிபுரம் ஒன்றிய திமுக சாா்பாக ஆண்டகளூா்கேட், பிள்ளாநல்லூா் பகுதிகளில் ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் குழுத் தலைவருமான கே.பி. ஜெகநாதன் தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதில் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கே.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.