நாமக்கல்: நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு கிளை அலுவலகங்கள் முன்பும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் கிளை தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல்-ன் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது, தொலைபேசி வழித்தடம், தொலைத் தொடா்பு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பிற செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது. ஊதியத்தை மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.