நாமக்கல்: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியதையொட்டி நாமக்கல்லில் கட்சியினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
காலியாகவுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் மருத்துவா் கனிமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் போட்டியிடுவதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த மூத்த திமுக நிா்வாகியான கே.ஆா்.ராமசாமியின் பேரனான ராஜேஷ்குமாா், கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் திமுகவின் அடிப்படை உறுப்பினராகவும், 1998 முதல் கிளை செயலாளராகவும், ஒன்றிய பிரதிநிதி, வெண்ணந்தூா் ஒன்றிய துணைச் செயலாளராகவும் பதவி வகித்தாா். 2011 முதல் 2020 வரை நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகப் பணியாற்றினாா்.
2020-இல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாா். நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்தமைக்காக தற்போது மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை அவருக்கு வழங்கி உள்ளது. அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
ராசிபுரத்தில்..
திமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா். என்.ராஜேஷ்குமாா் பெயரைக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதையடுத்து, ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதேபோல், ராசிபுரம் ஒன்றிய திமுக சாா்பாக ஆண்டகளூா்கேட், பிள்ளாநல்லூா் பகுதிகளில் ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் குழுத் தலைவருமான கே.பி. ஜெகநாதன் தலைமையில் கட்சியினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதில் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கே.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.