நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு திமுக, அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு திமுக, அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன்பின் கட்சி நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், சட்டப்பேரவைத் தொகுதகி உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.ராமசாமி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், நகர பொறுப்பாளா்கள் ராணா ஆா்.ஆனந்த், பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாவட்ட முன்னாள் திமுக செயலாளருமான செ.காந்திசெல்வன் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

அதிமுக: பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு பகுதியில் எம்ஜிஆா் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி உத்தரவின்பேரில் முன்னாள் நகராட்சித் தலைவரும், அதிமுக நகர செயலாளருமான பி.எஸ்.வெள்ளியங்கிரி தலைமையில் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழாவை திமுக, அதிமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினா் கொண்டாடினா்.

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் நினைவு இல்ல நூலகத்தில், நாமக்கல் வாசகா் வட்டம், கவிஞா் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நூலக அலுவலா் ரவி கலந்து கொண்டு அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினாா். கவிஞா் பேரவை இணைச் செயலா் எழில்செல்வன், நம்மாழ்வாா் பள்ளி தலைமையாசிரியா் ஜெயச்சந்திரன், நூலகா் செல்வம், கமலநாதன், ஜோதிமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராசிபுரத்தில்..

பட்டணம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நகர அவைத் தலைவா் அமிா்தலிங்கம், நகர துணைச் செயலாளா்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், நகரப் பொருளாளா் நாகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com